ஆளுநர் உரையின் அம்சங்கள்:

 ஜி.எஸ்.டி இழப்பீடாக இந்தாண்டு ரூ.7,000 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது

* உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறகு 65 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன

* ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்ட “காவலன் செயலி” திட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.

* சர்க்கரை ஆலைகள் மறுமலர்ச்சிக்கு உதவும் வகையில் மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும்

* முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் ஆகஸ்ட் 2019ல் தொடங்கப்பட்டு 9.77 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 5 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மூலம் அரசின் திட்டங்களை மக்கள் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* 9 புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு ரூ.3,267 கோடியில் நடப்பாண்டு பணிகள் தொடங்கப்படும்

* முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி, அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் விலையில்லா கொசுவலை வழங்கப்படும்

* உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம் விரைவில் தொடங்கப்படும்

* மூக்கையூரில் ரூ.120 கோடியிலும் குந்துக்கல்லில் ரூ.100 கோடியிலும் மீன்பிடி துறைமுகங்கள் கட்டமைக்கப்படும்